Saturday, January 3, 2009

Israli Attack on Gaza


காஸா;
"எதிரிகளிடம் மண்டியிட மாட்டோம்''


பலஸ்தீனத்தின் காஸா பகுதி மீண்டும் பற்றியயரியத் தொடங்கியிருக்கிறது. கடந்த வருட ஆரம்பத்தில் (ஜனவரி/பெப்ரவரி) இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்ட மிருகத்தனமான முற்றுகை காஸாவை திறந்தவெளி சிறைக்கூடமாக திணற வைத்திருந்தது. இருள் சூழ்ந்து காஸாவின் இயக்கமே அஸ்தமித்து சின்னஞ்சிறுசுகள் துடிதுடித்துப்போன அந்த உளவியல் ஒடுக்குமுறையில் இருந்து காஸா இன்னும் மீளவில்லை. அதற்குள் ஸியோனிசம் மீண்டும் ஒரு கொலைக்களத்தை காஸாவில் அரங்கேற்றியிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை (27) தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வரும் குரூரத் தாக்குதல்கள் காரணமாக இக்கட்டுரை எழுதப்படும் வரை சிறுவர், பெண்கள், வயோதிபர் என 417 க்கும் மேற்பட்ட அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளனர். இவர்களுள் 250 பேர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலைகளில் அல்லலுறுகின்றனர்.
1967 ஆம் ஆண்டு ஆறு நாட்கள் இடம் பெற்ற அரபு-இஸ்ரேல் யுத்தத்திற்குப் பின் பலஸ்தீனர்களுக்கு எதிராக நடக்கும் மிக மோசமான அடாவடித்தனமாக இந்தத் தாக்குதலை ஊடகங்கள் வர்ணித்துள்ளன.

இத் தாக்குதலில் ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பகுதியின் பொலிஸ் நிலையம், பள்ளிவாசல், பல்கலைக்கழகம், வைத்தியசாலை உட்பட ஹமாஸின் கட்டடங்கள், குடியிருப்புகள் என காஸாவின் உட்கட்டுமானம் சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றது.

இதுவரை ஹமாஸின் ரொக்கட் தளம் உட்பட 35 இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. வியாழனன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸின் அதிர் உயர் தலைவர்களுள் ஒருவரான ஷேய்க் நிஸார் ரய்யானும் 1-16 வயதுக்கிடைப்பட்ட அவரது 11 பிள்ளைகளுடன் 4 மனைவியருமாக ஒரே குடும்பத்தில் 15 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ரய்யானின் குடும்பம் இருந்த கட்டடத்தைவிட்டு வெளியேறுமாறு தாக்குதல் நடத்துவதற்கு முன்னைய நாள் தொலைபேசியில் அறிவிக்கப்பட்டதாகவும் ஹமாஸின் மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும் காஸாவின் வடமேல் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் வீசிவிட்டுச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

"பலஸ்தீன மக்களே! காஸா ப் பகுதி மக்களே! நீங்கள் கவலைப்பட வேண்டாம். உயிர்களைப் பறிகொடுத்ததற்காய் துன்பப்பட வேண்டாம். நிச்சயமாக! அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றான். நாம் வெற்றி பெறுவோம். வெற்றி மிகவும் அண்மித்து விட்டது. காஸாவிலிருக்கும் ஒவ்வொரு சிறுவனும் ஒவ்வொரு இளைஞனும் நாளை வீறுகொண்டெழுந்து யூத ஆயுதங்களை, விமானங்களை தகர்த்தெறிந்து வெற்றி கொள்வர்'' எனும் நற்செய்தியைக் கூறி காஸா மக்களை ஆறுதல்படுத்தி பலஸ்தீனர்களுக்கு வெற்றி அண்மித்துவிட்டதாக பலஸ்தீன் பிரதமர் இஸ்மாஈல் ஹனீயா தெரிவிக்கிறார்.

அத்தோடு, ""காஸாவில் நிகழ்ந்த கொலைவெறியாட்டமே உங்களது அரசியல் வாழ்வின் முடிவாகும். இஸ்ரேலியப் படைகளே! நீங்கள் காஸாவுக்குள் நுழைந்தால் அழிவு நிச்சயமாக காத்திருக்கிறது. அல்லாஹ் எம்முடன் இருப்பதனாலும் இஸ்ரேலை எதிர்த்து பலமான தாக்குதல் நடத்த நாம் தயாராயிருப்பதனாலும் எமக்கு வெற்றி நிச்சயம்'' என ஹமாஸ் தலைவர் ஹாலித் மிஷ்அல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தை குறித்து பேசுகையில், "இத்தாக்குதலை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும். அனைத்து காஸா எல்லைகளையும் உடனே திறந்து விட வேண்டும். இஸ்ரேலுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு அரபுலகம் உட்பட சர்வதேசமும் விரும்புவதாகவும் எம்மை அதற்கு இணங்கும்படி வலியுறுத்தியும் வருகின்றன. ஆனால், ஹமாஸின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது; ஹமாஸ் ஒருபோதும் எதிரிகளிடத்தில் மண்டியிடாது'' என்றும் ஹாலித் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் ஆட்சிக்கு வேட்டு வைக்கப்போகிறது ஹமாஸ் என்ற அச்சத்தின் காரணமாக அப்பாஸின் பின்னணியிலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. ஏனெனில், அப்பாஸின் ஆட்சிக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தப்போவதாகவும் பலஸ்தீன் அரசாங்கத்துக்கு புதியதொரு அரசியல் நகலை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் ஹமாஸ் அண்மையில் தெரிவித்திருந்தது.

காஸா மீதான இத்தாக்குதலுக்கு வழமைபோல் அமெரிக்கா-பிரிட்டன்-ஐரோப்பிய யூனியன் முதலான வல்லரசுகள் பின்னணிச் சக்திகளாக இருப்பது மட்டுமல்ல, எகிப்து-சஊதி போன்ற அரபு நாடுகள் இத்தாக்குதல்களுக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றன என்பதை அவற்றின் மெளன நாடகம் காட்டுகிறது. .
இத்தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன் இஸ்ரேலிய வெளிநாட்டமைச்சர் வீஷ்குஷ்ஸ்ரீஷ் ஸிஷ்ஸஐஷ் கெய்ரோவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டு எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கை சந்தித்தமையும் தாக்குதலுக்கு பின்னர் ஜனாதிபதி புஷ் ஹுஸ்னியை தொடர்பு கொண்டு இத்தாக்குதல் குறித்த எகிப்தின் மெளனத்துக்கு நன்றிசெலுத்தியமையும் எகிப்திய அரசாங்கம் அப்பாவிப் பலஸ்தீனர்களின் படுகொலைகளுக்கு எந்தளவு ஆதரவு வழங்குகிறது என்பதைப் புலப்படுத்துகிறது.

ஆனால், அம்மான், தெஹ்ரான், லெபனான் போன்ற நகரங்களில் இத்தாக்குதலை எதிர்த்து, பலத்த கோ­மெழுப்பி பேரணிகளை நடத்தினர். கடந்த வெள்ளியன்று சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தோனே´யர்கள் அந்நாட்டு அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் பாரியதொரு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

28ம் திகதியன்று ஜோர்தானிய பாராளுமன்றத்தில், இஸ்ரேலிய-ஜோர்தானிய சமாதான உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு கோரி 30 எம்பிக்கள் கைச்சாத்திட்டனர். இதனைத் தொடர்ந்து பலஸ்தீன பூர்வீக முஸ்லிம் எம்பி கலீல் அதிய்யாவும் ஜோர்தானிய கிறிஸ்தவ எம்.பி. பஸம் ஹத்ததின்வும் இணைந்து, இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்த்து இஸ்ரேலியக் கொடியை பாராளுமன்றில் எரித்தனர்.

அவ்வாறே பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளிலுள்ள பிரதான நகரங்களிலும் முஸ்லிம்கள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, ""காஸா மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குல் நிச்சயமாக ஒரு இனஒழிப்பு என்பதை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரேலுடனான உறவை அரபுத் தலைமைகள் உடனே முறித்துக் கொள்ள வேண்டும். ரபா கடவையை திறக்க எகிப்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கலாநிதி யூஸுஃப் அல்கர்ளாவி தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும்; அது பயங்கரவாதத்தை கைவிடும்வரை அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்றும் புஷ்-கிளின்டன்-புஷ் வரிசையில் நின்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வாழ்வே போராட்டம்; போராட்டமே வாழ்வு என வாழும் பலஸ்தீனர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தமது போராட்ட வாழ்வில் அனுபவித்த ஒரு துயரத்தின் பக்கமாகவே இதனைக் கொள்வர். அவர்கள் இத்தகைய பல கொடூர அனுபவங்களைத் தாண்டியே தமது எழுச்சிப் போராட்டமான "இன்திபாழா'வை ஹமாஸின் தலைமையில் அணிதிரண்டு முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வத்தனை இழப்புகள், ஒடுக்குமுறைகள், காட்டிக் கொடுப்புகள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில்தான் "இன்திபாழா' பலஸ்தீனை தலைநிமிர வைத்திருக்கிறது.

மூன்றாவது இன்திபாழாவுக்கான ஹமாஸின் அழைப்பு இதனை உண்மைப்படுத்துகிறது.

Sudan



அமெரிக்கா ஊதிய மகுடிக்கு!
ஆடுவாரா சூடான் அதிபதி?

- ஹஸீப் ரஸீத்


இன ஒழிப்பு மற்றும் போர்த் தொடுப்பை மேற் கொண்டார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சூடான் ஜனாதிபதி உமர் அல்பஸீர் மீது பிடியாணை பிறப்பிக் குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரெனோ கடந்த ஜூலை 14ம் திகதி சர்வதேச நீதிபதிகளைக் கோரியுள்ளார். இது சூடான் அரச ஆதரவாளர்களை உஷ்ணமடையச் செய்துள்ளதோடு ஆபிரிக்க ஒன்றியத்தையும் இக்கட்டான நிலைக்கு ஆளாக்கியுள்ளது.


பூர், மஸாலிட் மற்றும் ஜஹாவா இனத் தாரை படுகொலை செய்தமை, குறுங் காலத்துக்குள் குறித்த இனங்கள் ஒழிந்துபோக ஏதுவான உடல்-உள ரீதியான மறைமுக தீங்குகளை இழைத்தமை, தார்பூரில் அப்பா விச் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை மேற் கொண்டமை, பலவந்தமாக மக்களை அகதி களாக்கியமை, பாலியல் வல்லுறவுகள்-சித்திர வதைகள்-சூறையாடல் மேற்கொண்டமை முதலானவற்றால் சுமார் 3 இலட்சம் பேரை படுகொலை செய்தும்; சுமார் 2.5 மில்லியன் பேரை அகதிகளாக்கியமைக்காகவுமே ஜனாதிபதி உமர் அல்பஸீர் மீது பிடியாணை பிறப்பிக்குமாறு லூயிஸ் வேண்டியுள்ளார்.


சர்வதேச பாதுகாப்புச் சபையின் பணிப் புரையின் பேரில் கோரப்பட்ட இப்பிடியா ணையை 3 சர்வதேச நீதிபதிகள் கொண்ட குழு பரிசீலிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. சூடானிய பாதுகாப்புக்காக ஐக்கிய ஆபிரிக்க-ஐ.நா கூட்டுப் படைக்கான துருப் புகளை அனுப்பியுள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன் போன்ற மேற்கு நாடுகள் இப் பிடியாணையை உடனடியாக நிறைவேற்று மாறு சர்வதேச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளன.


இப்பிடியாணை நிறைவேற்றப்படுமானால், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒரு நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைதுசெய்யப்படுவது சர்வதேச அரங்கில் இதுவே முதல் தடவையாக இருக்கும். இதேநேரம், ""இப்பிடியாணையின் பேரில் சூடான் ஜனாதிபதி கைதுசெய்யப்படு வாராயின், தார்பூர் விவகாரத்தில் களமிறங்கியிருக்கும் சர்வதேச சமாதானத் தரகர்கள் நிச்சயம் விரட்டியடிக்கப்படுவர். இதற்கு நாம் பொறுப்புதாரிகள் அல்ல. நாம் இக்குற்றப் பிரேரணையை முற்றாக நிராக ரிக்கிறோம். எந்தவொரு விசா ரணைக்கும் பதிலளிக்க எமது ஜனாதிபதியை நாம் அனும திக்கமாட்டோம்'' என சூடான் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.


""சூடான் அரசாங்கம் இதற்கு உடன்பட்டு, தனது நாட்டு ஜனாதிபதியை தனது கரங்களினாலேயே ஒப்படைக்கவும் அது கடமைப்பட்டுள்ளது'' என சர்வதேச பாதுகாப்புச் சபை அறிக்கை விட்டிருக்கிறது. சர்வதேச நீதிமன்றில் அங்கம் வகிக்காத அமெரிக்கா இப் பிரேரணையை விரைவு படுத்துமாறு அச்சபையை வலியுறுத்தி வருவது ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது.

எனினும், புதியதொரு நீதிமன்றத்தினூடாக இவ்விசாரணையை நடத்த ஆபிரிக்க ஒன்றியம் இணங்கியுள்ளதாக அரபு லீக் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தென்னாபிரிக்கா ஜனாதிபதி தபூ மெகி-எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் இடையில் இவ்விவகாரம் குறித்த செய்தியாளர் மாநாடு அண்மையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்றது. இதில், இப்பிடியாணைக்கான விசாரணை களை இன்னும் ஒரு வருடத்துக்கு தாமதிக்கு மாறு இரு பெரும் தலைவர்களும் ஒன்றிணைந்து வேண்டிக் கொண்டனர்.


அத்தோடு, ""தற்போது சூடுபிடித்திருக்கும் தார்பூர் மோதல்களை தணிப்பது மட்டு மன்றி, 2005ல் வட-தென் சூடான் தலைமைத் துவங்களுக்கு இடையில் கைச்சாத்தான உடன்படிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் நோக்கத்தையும் இப் பிரேரணை யைத் தாமதிக்கும் கோரிக்கை நோக்காகக் கொண்டுள்ளது'' என இரு நாட்டுத் தலைவர்களும் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறே லிபியாவும் தென்ஆபிரிக்காவும் இணைந்து பUர் மீதான பிடியாணையை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்குமாறு வேண்டி அறிக்கை ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளன.

இதேநேரம் கடந்த ஜூன் 23ம் திகதி ஜனாதிபதி பஸீர் பலத்த பாதுகாப்புடன் வட தார்பூர் பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அங்கு சுமார் 10 ஆயிரம் ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் ஜனாதிபதி பஸீர் பின்வரு மாறு உரையாற்றினார்:""நாம் சமாதானத்தையே விரும்புகிறோம். எமக்கு சமாதானம்தான் வேண்டும். தார்பூரில் சமாதானத்தைக் கொண்டுவர முடியுமானவர்கள் நாமே. எமது இச் செய்தியை சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். நாம் இக்குற்றச்சாட்டை பொருட்படுத்த வில்லை.


இந் லூயிஸுக்குப் பின்னால் யார் இருக்கிறார் என்பதை நாம் நன்கறிவோம். ஏனைய நாடுகளைப் போன்று எம்மையும் சோரம் போக வைக்க அச்சக்திகள் முனைகின் றன. அது ஒருபோதும் நடக்காது.''மத்திய கிழக்கு-ஆபிரிக்கப் பிராந்திய எண்ணெய் வளத்தைச் சுரண்ட திட்டம் தீட்டிய புஷ் நிருவாகம், ஈராக்கை தாக்கிய ழித்து விட்டு, அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சத்தாம் ஹுஸைனையும் இன ஒழிப்பு குற்றம் என தூக்கிலிட்டது. அமெரிக்காவின் இப்போலிக் குற்றசாட்டுப் பட்டியலின் அடுத்த நகர்வுதான் இந்த பUர் என்பது வெள்ளிடையானதே. இதன் பின்னணியிலேயே, 2003ல் உமர் அல்பஸீர் சூடான் ஜனாதிபதியாக கையேற்ற தோடு, தனது செல்லக் குழந்தையான சல்வா கிர்ரை அரசாங்கத்துக்கு எதிராகப் போராடி வந்த சூடான் விடுதலை இயக்கத்தின் தலைவராக மாற்றி, இவரைக் கொண்டு வட-தென் சூடானை கூறுபோட்டுக் கொள்ளவும் திட்டம் தீட்டி அதற்கான நடவடிக்கைக ளிலும் இறங்கியது அமெரிக்கா.


இன்னொரு புறத்தில் தார்பூர் பகுதியில் வசிக்கும் பழங்குடிகளை இன வெறி, கோத்திர வெறி முதலான நச்சுவிதைகளை அவர்களிடையே விதைத்து அதில் வெற்றியும் கண்டது. சுமார் 30 க்கும் அதிகமான மாஸோனியா போன்ற கிறிஸ்தவ அமைப்புகளை தார்பூரில் நிறுவி ஸியோனிஸக் கொள்கை களையும் அமெரிக்கா பரப்பியது.அத்தோடு, சூடானைச் சூழவுள்ள கிறிஸ்தவ நாடுகளைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு பண ரீதியில் உதவி செய்து அரசாங் கத்துக்கெதிரான பாரிய எதிர்ப்பலைகளை கிளப்பி நாட்டை கூறுபோட முனைந்தது. இறுதியில் அதில் வெற்றியும் கண்டது.இத்தகைய பாரிய அழுத்தங்களை சந்திக்க முடியாத ஜனாதிபதி உமர் அல்பஸீர், ஈற்றில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்துக்கு இணங்க வேண்டிய நிர்ப்பந்த நிலைமை தோன்றி, 2005ம் ஆண்டு தேர்தலில் 450 அங்கத்தவர் களைக் கொண்ட சூடான் பாராளுமன்றத் தில் 30%ஆன ஆசனங்கள் சூடான் விடுதலை இயக்கத்துக்கு கிடைக்கும் சந்தர்ப்பம் அமைந்தது.

இவ்வாறான அமெரிக்க பின்புல சதிகளி னால் 4.2 மில்லியன் தார்பூரியர் பலவிதத் திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.1 மில்லியன் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந் துள்ளனர். சுமார் 2 இலட்சத்து 34 ஆயிரம் பேர் சாட்டில் மட்டும் அகதிகளாக வாழ்கின் றனர். 2.4 மில்லியன் பேர் நேரடியாக மனிதாபிமான உதவிகளைப் பெறுவதாக ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.


இப்படி மேற்கினதும் கிறிஸ்தவ சக்திகளினதும் சூழ்ச்சிகளால் உருவானதே தார்பூரினதும் முழு சூடான் நாட்டினதும் நிலையாகும். இதன் ஓரங்கமாகவே, இஸ்லாமிய ச­ரீஅத்தின் அடிப்படையில் நாட்டை வழிநடத்த முற்படும் உமர் அல்பஸீர் மீதான நெருக்கடி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரும் சூடான் அரசாங்கமும் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் என்பது ஒரு முக்கிய வினா.

உமர் அல்பஸீர் மீது சுமத்தப்பட்டுள்ளது போன்று பலநூறு மடங்கு குற்றச்சாட்டுகளை அமெரிக்க-ஐரோப்பிய-இஸ்ரேல் ஆதரவு நாட்டுத் தலைவர்கள் மீது சுமத்தும் அளவுக்கு இந்த உலகில் எவ்விதமான மனிதநேயத்துக்கு எதிரான வன்முறைகளும் இடம்பெறவில் லையா என்பது இன்னொரு முக்கிய வினா!

தற்போது அணு உலைக் களஞ்சியமாக - ஈரான், அல்கைதாவின் புகலிடமாக- பாகிஸ் தான், இன ஒழிப்பு தலைமைத்துவமாக- சூடான் என முஸ்லிம் நாடுகளை வரிசைப்படுத்தி சர்வதேச அரங்கில் அவற்றை பயங்கர வாதிகளாகக் காட்டி வருகிறது. புஷ்-கொண்ட லீஸா வரைந்த வெளிநாட்டுக் கொள்கை. ஜனவரி 2009 க்கு பின் காலாவதியாகப் போவது தெரிந்து, அவற்றை விரைவாக நடை முறைப்படுத்த பகீரதப் பிரயத்தனம் எடுக்கும் புஷ் நிருவாகத்தின் ஒவ்வொரு நகர்வும் உலகறிந்ததே!

Publised in Engal Thesam on Aug - 1-14

Mumbay Attack


மும்பை தாக்குதலும் வல்லரசுகளின் எஜன்டாவா?!
ஹஸீப் ரஸீத்
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பைக்குள் இனந்தெரியாத ஆயுததாரிகள் கடல்வழியாக நுழைந்து புகையிரத நிலையம், வைத்தியசாலை, யூதர்களின் மையம், பிரபல ஐந்து நட்சத்திர உணவகங்கள் என சுமார் 10 பிரத்தியேக இடங்களின் மீது நவம்பர் 26-28 வரை தொடர் தாக்குதல் ஒன்றை நடத்தினர். ஒபரோய், தாஜ்மஹால் பெலஸ் போன்ற பிரபல உணவகங்களில் நடைபெற்ற தாக்குதல் சர்வதேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சுமார் 62 மணிநேரங்களாக தீவிரவாதத் தாக்குதல்... சுமார் 195 பேர் படுகொலை... சுமார் 300 பேர் படுகாயம்... அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற 22 சர்வதேச பிரஜைகள் பலி... 9 தீவிரவாதிகள் ஸ்தலத்தில் சுட்டுக்கொலை... போன்ற அதிர்ச்சித் தகவல்களை நிமிடங்கள்தோறும் வெளியிட்ட ஊடகங்களுக்கு, இத்தாக்குதலில் ஒரே குடும்பத்தில் நால்வர் உட்பட மொத்தமாக 42 முஸ்லிம்கள் கொல்லப்பட்டும்; சத்ரபதி சிவாஜி புகையிரத நிலையத்தில் மட்டும் 22 முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் சாதி-இன-மத வேறுபாடுகளின்றி இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட உண்மை தெரியாது போனதா? இல்லை, பக்கசார்பாக நடந்து கொண்டனவா?

அவ்வாறே,
  • மூன்று நாட்களாக தாக்குதல் நடத்துமளவு ஆயுதங்களை தீவிரவாதிகள் சுமந்து வந்தார்களா? இல்லை, தாக்குதலின்போது அவர்களுக்கு அவ்வப்போது ஆயுதங்கள் வழங்கப்பட்டதா?
  • வாய்ந்த இந்திய பாதுகாப்புப் படையினர் இருக்க, தீவிரவாதிகள் மும்பைக்குள் கடல்வழியாக எவ்வாறு நுழைந்தனர்? அதுவரையும் படையினர் தூங்கிக் கொண்டிருந்தார்களா?
  • நிகழ ஒரு மாதத்துக்கு முன்னே அமெரிக்காவில் தகவல் கசிந்து, அமெரிக்கா இரு தடவைகள் இந்தியாவுக்கு அறிவித்தாக கூறப்படுகிறது. பாதுகாப்பைப் பலப்படுத்தாமல் அசமந்தப் போக்கில் மத்திய அரசாங்கம் நடந்து கொண்டது ஏன்?
  • மணிக்கட்டில் சிவப்புப் பட்டி கட்டியிருந்த புகைப்படங்கள் வெளியாகின. சிகப்புப் பட்டிக் கலாசாரம் ஆர்.எஸ்.எஸ். க்கு உரியதே! யாரவர்கள்?
  • இராணுவமோ அல்லது ஊடகங்களோ தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளை உடனடியாக காட்டாதது ஏன்?
  • இரு தீவிரவாதிகள் யூதர்களின் தங்குமிடத்தில் குறித்த நாளுக்கு முன்னரே தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாக்குதலுக்கு யூதர்களும் ஆதரவா?

போன்ற சந்தேகங்களுக்கு சர்வதேச மீடியாக்கள் இதுவரை விடைகூறவில்லை; சர்வதேசமும் இவற்றுக்கு விடைகாண முற்படுவதாகவும் தெரியவில்லை.

இத்தாக்குதல் நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு சினிமாக் காட்சி போல் சித்திரித்து முழு உலகையுமே வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கிய ஊடகங்கள், எந்தவொரு சாட்சியமோ, தடயமோ இல்லாதபோதும் முஸ்லில்கள் மீதும் பாகிஸ்தான் மீதும் வழமைபோல் பழிசுமத்தின. இதனால் இந்தியாவில் பாரியதொரு இனக் கலவரம் உருவெடுக்கும் என பொதுமகன் உட்பட அரசியல்வாதிகள், அரசியல் ஆய்வாளர்கள் போன்ற அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், எதிர்மறையாக அனைத்து இந்தியர்களும் கவலை, சோகம், ஆவேசம் என அனைத்து உணர்வுகளையும் சாதி-இனம்-மதம் வேறுபாடின்றி ஐக்கியமாக பகிர்ந்து கொண்டு படுகாயமுற்றோருக்கு உதவியதும்; இந்து-முஸ்லிம் உறவு முன்னரைப் போன்றல்லாது பலமாக இருப்பதையுமே நிகழ்வுகள் எடுத்துக்காட்டின.


எனினும், மும்பைத் தாக்குதல் சுத்தமான தீவிரவாதம் என்பதில் சந்தேகமே இல்லை. இதனை, "இதுபோன்ற நிகழ்வு அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ, பாகிஸ்தானிலோ, ஈராக்கிலோ நிகழ்ந்தாலும் அது தீவிரவாதமே'' என பாகிஸ்தான் பிரதமர் கிளானி தெரிவித்தார்.

சர்வதேசத்தின் சீற்றத்தால் இந்திய முஸ்லிம்கள் அச்சமுற்றிருந்தவேளை இந்திய முஸ்லிம் தலைமைகள் இது குறித்து தீர்க்கமான முடிவுகளையே எடுத்தன.
தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளையும் முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்ய இந்திய பாதுகாப்புத் துறை கோரியபோது, "தீவிரவாதம் இஸ்லாத்துக்கு முரணான செயல் என்பதால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல'' என மும்பை முஸ்லிம் தலைமைகள் அக்கோரிக்கையை மறுத்து விட்டன.

அத்தோடு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், அனைத்து இந்திய முஸ்லிம் மஜ்லிஸ், ஜமாஅத் அல்உலமா ஹிந்த் முதலான அமைப்புகளை உள்ளடக்கிய Coordination Committee of India இத்தீவிரவாத செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது. தமது செயலை நியாயப்படுத்தவே இஸ்லாத்தின் பெயரை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர் எனவும் இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் இன-மத வேறுபாடின்றி உதவும்படியும் அவ்வமைப்பு முழு இந்தியர்களையும் வேண்டிக் கொண்டது.

அத்தோடு, ஈதுல் அழ்ஹா குத்பாவின் போது மும்பை தாக்குதலின் மீதான கண்டத்தை தெரிவிக்கக் கோரி அனைத்து இமாம்களுக்கும் அவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்தது. இதனாலேயே சுமார் 1.5 பில்லியன் இந்திய முஸ்லிம்களும் ஈதுல் அழ்ஹாவை நிம்மதியாக கொண்டாட முடிந்தது எனலாம்.


தீவிரவாதத்தை முடக்கும் சக்திகளாக போலி வே­ம் தரித்த அமெரிக்கா, இஸ்ரேல், லண்டன் போன்ற வல்லரசுகள் ஊதிய மகுடிக்கு ஆடிய இந்தியா, ""இத்தாக்குதலின் சூத்திரதாரிகள் பாகிஸ்தானியர்தான். உடனடியாக தீவிரவாதிகளின் கொட்டத்தை பாகிஸ்தான் அடக்க வேண்டும். கைதுசெய்தோரை உடனே இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்'' என பாகிஸ்தானை எவ்வித ஆதாரமோ தடயங்களோ இன்றி மிரட்டத் தொடங்கியது.

அதனோடு அமெரிக்காவும் இஸ்ரேலும் பலத்த அழுத்தங்களை பாகிஸ்தானுக்கு கொடுக்கத் தொடங்கின.
இதனால் பாகிஸ்தான் கைதுநடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி ஜமாஅத்தே-தஃவா மற்றும் அஸ்கர்-ஏ-தைபா அமைப்புகளின் நடத்துனர் ஹாபிழ் முஹம்மத் சஈதையும் அவரது 4 அதிகாரிகளையும் பாக். புலனாய்வுப் பிரிவால் கைதுசெய்து வீட்டுக் காவலில் வைத்தது. இதற்கிடையில் ஷேஹ் ரஹ்மான் லக்வி, சரார் ஷா போன்ற முக்கிய அங்கத்தவர்களும் கைதாகினர். ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ஏழைகளுக்கு பாடசாலைகள்-மத்ரஸாக்கள்-வைத்தியசாலைகள்- நலன் புரிநிலையங்கள் போன்றவற்றின் மூலம் தோள்கொடுத்துவரும் ஜமாஅத்-ஏ-தஃவா அமைப்பின் செயலகங்கள் முத்திரை இடப்பட்டும் அங்கத்தவர்களின் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டும் அதன் செயற்பாடுகள் அனைத்தையும் ஸ்தம்பிக்க வைத்தது பாக். அரசாங்கம் நாட்டு மக்களுக்கு செய்கின்ற இராஜ துரோகம் என்று பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் காழி ஹுஸைன் அஹ்மத் நோர்வே, டென்மார்க், ஜேர்மன், இத்தாலி போன்ற மேற்கு நாடுகள் கலந்து கொண்ட அண்மைய மாநாடொன்றில் தெரிவித்தார். தாக்குதலின்போது இந்திய அதிரடிப் படையினரால் கைதான கபாப் என்பவர் அஸ்கர்-ஏ-தைபா அமைப்பின் அங்கத்தவர் என விசாரணையின் மூலம் தெரிய வந்ததாக தாக்குதல் நடைபெற்றபோது ஆதாரமின்றி முஸ்லிம்கள் மீது பழிசுமத்திய அதே ஊடகங்களே இத்தகவலையும் தெரிவித்திருக்கின்றன?! ஆனால், இவர் 2006ம் ஆண்டு இந்திய ஏஜென்ஸிகளால் நேபாளிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாகவும் இதுகுறித்து நேபாள உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதாகவும் முதல்வர் பாரூகின் அண்மைய அறிக்கை குறிப்பிடுவதாக பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமியின் செயலாளர் முனவ்வர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்தியா விடுத்த ஆதாரமற்ற கோரிக்கைக்கு செவிசாய்த்து சுமார் 24 மணிநேரத்துக்குள் அஸ்கர்-ஏ-தைபா மற்றும் ஜமாஅத்தே தஃவா அமைப்புகளை தடைசெய்து, ஹாபிஸ் முஹம்மத் சஈத், ஸகிஉர் ரஹ்மான் முதலான நான்கு தலைவர்களை தனது பயங்கரவாதப் பட்டியலிலும் சேர்த்துள்ளது ஐ.நா. அதன் உறுப்பு நாடுகளிலுள்ள அவ்வமைப்புகளின் கிளைகளை மூடுதல், உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடைசெய்தல் முதலானவற்றை அமுல்படுத்துமாறும் அது ஆணை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கோட்டை என இந்தியா மூச்சுக்கு முன்னூறு முறை உச்சரித்தாலும் இந்தியாவில் மட்டும் நூற்றுக்கணக்கான ஆயுத அமைப்புகள் இயங்கி, ஆயிரக்கணக்கான தீவிரவாத பயிற்சிப் பாசறைகள் இந்திய இளைய சமூகத்துக்கு இனவாதத்தை ஊட்டி வருகின்றன.
இந்துத்துவ இனவாத கும்பல்களைக் கொண்ட சுமார் 14 பிரிவினைவாத இயக்கங்கள் இந்தியாவில் செயற்படுகின்றன.


உண்மையில், நரேந்திர மோடி, ஏ.பீ. வாஜ்பாயி, எல்.கே. அத்வானி போன்ற இனவாத அரசியல்வாதிகளைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்கள் போன்றோருக்கு எதிராக இனப் படுகொலைகளை நீண்டகாலமாக அரங்கேற்றி வருகின்றது.

7 மில்லியன் தொண்டர்களைக் கொண்டு நாடுபூராவும் 45 ஆயிரம் கிளைகளைக் கொண்டு அவ்வமைப்பு இயங்கி வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.


இவ்வமைப்பு இதுவரை 2002ல் குஜராத் இன ஒழிப்பு, டிச. 1992-ஜன. 1993 வரை மும்பையில் நடந்த இந்து-முஸ்லிம் இனமோதல், சுமார் 15 வருடங்களுக்கு முன் பாபரி மஸ்ஜித் விவகாரத்தின் சீற்றம், காஷ்மீர் பிரச்சினை போன்ற நீண்டதொரு இனஒழிப்பு எஜன்டா மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்திருப்பது சர்வதேசமும் அறிந்ததே.

இவ்வாறு குஜராத், அயோத்தி, அஸாம், காஷ்மீர் போன்ற மாநிலங்களை கொலைக்களமாக மாற்றிய ஆர்.எஸ்.எஸ். இத்தாக்குதலின் பின்னணிச் சக்தியாக இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியிருக்கிறது. சிலவேளை, ஈராக், ஆப்கானை யுத்த களமாக மாற்றிய அமெரிக்க உளவு நிறுவனம் CIA உம் சுமார் 60 வருடங்களைத் தாண்டியும் பலஸ்தீனுக்குள் அத்துமீறி அராஜகம் புரியும் இஸ்ரேலின் உலவு நிறுவனம் Mosaad உம் ஆர்.எஸ்.எஸ். இன் இனவாதத்துக்கு கைகொடுத்திருக்கலாம்.

இவ்வருடம் மட்டும் இந்தியாவில் சுமார் 10 பெரும் தொடர்குண்டு வெடிப்பு நிகழ்வுகளுக்கு சந்தேகத்தின்பேரில் முஸ்லிம் வாலிபர்களே கைதுசெய்யப்பட்டு, போலிக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

ஆனால், இத்தகைய தாக்குதல்களின் பின்னணியில் செயற்படுவோர் இந்துத்துவவாதிகள் என்ற உண்மையை மதசார்பற்ற அமைப்புகள்கூட ஏற்றுக் கொள்கின்றன.
கடந்த செப்டம்பரில் மலிங்கன் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடையோர் என இரு இராணுவத் தளபதிகள் உட்பட அறுவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுள் Central Hindu Military Education Society இன் கீழ் இயங்கும் Bonsala Military School ஐச் சேர்ந்த ஒரு இராணுவ அதிகாரியும் உள்ளடங்குகிறார்.

இவ்வாறான பல அதிர்ச்சித் தகவல்கள் திரைமறைவில் இருக்கின்றன.
ஏனெனில், கந்தகார் சிறை உடைப்பையடுத்து தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்திருப்பதாகக் கூறி பாகிஸ்தானை தீவிரவாதிகளின் கோட்டை என சித்திரித்து ஈராக்கில் வாபஸ் பெற்ற தனது படையை பாகிஸ்தானிலும் ஆப்கானிலும் நிலைநிறுத்தும் அங்கீகாரத்தை சர்வதேசத்திடம் பெற்றுக் கொள்ளும் பகீரத முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. செப். 11 தாக்குதலைக் காரணங்காட்டி ஆப்கானைத் தாக்கியதுபோல மும்பைத் தாக்குதலைக் காரணங்காட்டி பாகிஸ்தானைத் தாக்குவதற்கான சர்வதேச வல்லரசுகளின் எஜன்டாவின் அடுத்த நிகழ்ச்சியே மும்பைத் தாக்குதலாக இருக்கும்!

Gaza



"காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள்தான் எனது வாழ்வில் நான் நேரடியாக கண்ட பயங்கரமான நிகழ்வு. எனது வீடு காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இஸ்ரேலிய இராணுவம் வீசிய ஏவுகணைகளில் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடம், மதில்கள், யன்னல்கள் என எல்லாமே சரிந்து வீழ்ந்தன. தூசுப்படலமும் புகை மண்டலமும்தான் அதிலிருந்து கிளம்பியது. பக்கத்துக் குடியிருப்பில் வசித்த பலர் கருகிச் சாம்பலாகினர். எனது அனுபவத்தில் அன்று என்னுடைய இதயமே வெடித்து வாயினால் வந்து விடுமோ என்று நான் அஞ்சினேன்....''

அமெரிக்காவைச் சேர்ந்தவரும் தற்போது காஸா பகுதியில் கடமை புரியும் சுதந்திர ஊடகவியலாளருமான சபா ஐவ்டாவின் நேரடி அனுபவம் இது.

பலஸ்தீனத்தின் காஸா பகுதி மீண்டும் பற்றியயரியத் தொடங்கியிருக்கிறது. கடந்த வருட ஆரம்பத்தில் (ஜனவரி/பெப்ரவரி) இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்ட மிருகத்தனமான முற்றுகை காஸாவை திறந்த சிறைக்கூடமாக திணற வைத்திருந்தது. இருள் சூழ்ந்து காஸாவின் இயக்கமே அஸ்தமித்து சின்னஞ்சிறுசுகள் துடிதுடித்துப்போன அந்த உளவியல் ஒடுக்குமுறையில் இருந்து காஸா இன்னும் மீளவில்லை. அதற்குள் ஸியோனிசம் மீண்டும் ஒரு கொலைக்களத்தை அரங்கேற்றியிருக்கின்றது.
கடந்த சனிக்கிழமை (27) தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வரும் குரூரத் தாக்குதல்கள் காரணமாக இக்கட்டுரை எழுதப்படும் வரை (31 டிஸம்பர்) சிறுவர், பெண்கள், வயோதிபர் என 360 க்கும் மேற்பட்ட அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டும் ஆயிரத்து எழு நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளனர்.
தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட சனிக்கிழமை மாத்திரம் ´பா வைத்தியசாலையில் 15 நிமிடத்திற்குள் 250 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
1967 ஆம் ஆண்டு ஆறு நாட்கள் இடம் பெற்ற அரபு-இஸ்ரேல் யுத்தத்திற்குப் பின் பலஸ்தீனர்களுக்கு எதிராக நடக்கும் மிக மோசமான அடாவடித்தனமாக இந்தத் தாக்குதலை ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இத் தாக்குதலில் ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பகுதியின் பொலிஸ் நிலையம், பள்ளிவாசல், பல்கலைக்கழகம், வைத்தியசாலை உட்பட குடியிருப்புகள் என காஸாவின் உட்கட்டுமானம் சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றது. இடிபாடுகளுள் சிக்கியுள்ள அப்பாவி பலஸ்தீனர்களின் உடல்கள் தொடர்ந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுவருகின்றன.
ஏலவே, மின்வசதி துண்டிப்பு, உணவு-நீர் தட்டுப்பாடு, கடவைகள் மூடிவைப்பு, தொழிலின்மை, பொருளாதாரத் தடை என பல வழிகளிலும் ஒடுக்கப்பட்டு 80%ஆனோர் பசி-பட்டினியில் வாடும் அப்பாவிப் பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மேற்குலகம் கிறிஸ்மஸ், புதுவருட கொண்டாட்டங்களில் குதூகலித்திருப்பது மற்றுமொரு கொடுமை.
எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் ஆட்சிக்கு வேட்டு வைக்கப்போகிறது ஹமாஸ் என்ற அச்சத்தின் பின்னணியிலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அரசியல் பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், அப்பாஸின் ஆட்சிக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தப்போவதாகவும் பலஸ்தீன் அரசாங்கத்துக்கு புதியதொரு அரசியல் நகலை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் ஹமாஸ் அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காஸா பகுதி மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு ஹமாஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா ரைஸ் வேடிக்கையானதொரு அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார். மேற்கு சக்திகளுக்கு தாளம் போடும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸும் ஹமாஸின் தலைமை பீடத்திற்கு கண்டனங்களை வெளிப்படுத்தியிருப்பது அதை விடவும் வினோதமாக இருக்கிறது.
காஸா மீதான இத்தாக்குதலுக்கு வழமைபோல் அமெரிக்கா-பிரிட்டன்-ஐரோப்பிய யூனியன் முதலான வல்லரசுகள் பின்னணிச் சக்திகளாக இருப்பது மட்டுமல்ல, எகிப்து-சஊதி போன்ற அரபு நாடுகள் இத்தாக்குதல்களுக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றன என்பதை அவற்றின் மெளன நாடகம் காட்டுகிறது. தனது சகோதர சகோதரிகளின் இரத்தம் உறிஞ்சப்படும் நிலையில் முதுகெலும்பில்லா அரபுலகம் எவ்வளவு தூரம் மேற்கின் அடிவருடியாக செயல்படப் போகிறது என்பது இதன் மறுபுறம்.
இத்தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன் இஸ்ரேலிய வெளிநாட்டமைச்சர் வீஷ்குஷ்ஸ்ரீஷ் ஸிஷ்ஸஐஷ் கெய்ரோவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டு எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கை சந்தித்துள்ளார். அவ்விஜயத்தின் தொடராக, சஊதி அரேபியாவுக்கும் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இத்தாக்குதல்கள் சுமார் நான்கு நாட்களாகத் தொடர்ந்தநிலையிலும் அரபுலகம் எவ்வித கண்டனமும் தெரிவிக்காது மெளனம் சாதிப்பது அரபுலகுக்கும் இஸ்ரேலுக்கும் உள்ள புரிந்துணர்வை அம்பலப்படுத்துவதாகவே உள்ளது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஒரு பொதுமகனின் கண்ணீரை இன்னொரு பொதுமகனால்தான் வாசிக்க முடியும் என்பதனை மத்திய கிழக்கிலுள்ள சாதாரண பிரஜைகள் அவர்களது எதிர்ப்புப் பேரணிகளின் மூலம் வெளிக்காட்டியுள்ளனர்.
அம்மான், தெஹ்ரான், லெபனான் போன்ற நகரங்களில் இத்தாக்குதலை எதிர்த்து, ""அமெரிக்கா ஒழிக! இஸ்ரேல் ஒழிக! ஸியோனிஸம் ஒழிக!'' போன்ற சுலோகங்களை ஏந்திய வண்ணம் பலத்த கோ­மெழுப்பி பேரணிகளை நடத்தினர். அவ்வாறே பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளிலுள்ள பிரதான நகரங்களிலும் முஸ்லிம்கள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியுள்ளனர்.
அரபுலகில் அரசியல் தலைமைகள் மெளனம் சாதித்தாலும் இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
""காஸா மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குல் நிச்சயமாக ஒரு இனஒழிப்பு என்பதை சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என கலாநிதி யூஸுஃப் அல்கர்ளாவி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இஸ்ரேலுடனான உறவை அரபுத் தலைமைகள் உடனே முறித்துக் கொள்ள வேண்டுமெனவும் ரபா கடவையை திறக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் எகிப்திய அரசாங்கத்தை அவர் வேண்டிக் கொண்டார்.
இத்தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும்; அது பயங்கரவாதத்தை கைவிடும்வரை அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்றும் புஷ்-கிளின்டன்-புஷ் வரிசையில் நின்று தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் முஹர்ரம் புத்தாண்டிலே காலடி எடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் காஸா மீது படையயடுத்திருக்கும் ஸியோனிச கும்பல் தோற்கடிக்கப்படவும் காஸா மக்களின் துன்பங்கள் நீங்கவும் அவர்களது விடுதலைப் போராட்டம் வெற்றி பெறவும் அதற்காக ஒவ்வொரு தொழுகையிலும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். நடுநிசியில் எழுந்து அழுது தொழுது ஸுஜூதில் வீழ்ந்து பிரார்த்திப்போம். நாம் இங்கிருந்து அவர்களுக்காக உடனடியாக செய்யும் மாபெரும் உதவி துஆ எனும் ஆயுதம்தான். எமது ஒவ்வொரு பிரார்த்தனையிலும் பலஸ்தீனையும் சேர்த்துக் கொள்வோம்.
இந்நிலையில், வாழ்வே போராட்டம்; போராட்டமே வாழ்வு என வாழும் பலஸ்தீனர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தமது போராட்ட வாழ்வில் அனுபவித்த ஒரு துயரத்தின் பக்கமாகவே இதனைக் கொள்வர். அவர்கள் இத்தகைய பல கொடூர அனுபவங்களைத் தாண்டியே தமது எழுச்சிப் போராட்டமான "இன்திபாழா'வை ஹமாஸின் தலைமையில் அணிதிரண்டு முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வத்தனை இழப்புகள், ஒடுக்குமுறைகள், காட்டிக் கொடுப்புகள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில்தான் "இன்திபாழா' பலஸ்தீனை தலைநிமிர வைத்திருக்கிறது.
மூன்றாவது இன்திபாழாவுக்கான ஹமாஸின் அழைப்பு இதனை உண்மைப்படுத்துகிறது.

Monday, December 22, 2008

இணையப் பாவனை - ஒரு சர்வதேசப் பார்வை -




- ஹஸீப் ரஸீத்

இணையம் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாகி விட்டது. நாளுக்கு நாள் அதனது தேவையும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இணைய அறிவை வைத்து ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரத்தை கணிக்கும் அளவுக்கு மாறிவிட்டது.

அந்தவகையில், சர்வதேச ரீதியில் அண்ணளவாக 12 பில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களுள் பிராந்திய ரீதியில் பின்வரும் வீதத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன:

  • ஆசியா 37%
  • ஐரோப்பா 27%
  • வடஅமெரிக்கா 20%
  • தென் அமெரிக்கா 9%
  • ஆபிரிக்கா 3%
  • மத்திய கிழக்கு 2%
  • அவுஸ்திரேலியா 2%

சர்வதேச நாடுகளின் வரிசையில் 181.9 மில்லியன் பாவனையாளர்களை அமெரிக்கா முதலிடம் பெற்றிருக்கிறது. பணத்திலேயே மிதக்கும் அமெரிக்கவர்கள் தனது சிறுவயது முதலே இணையப் பிரியர்களாக இருக்கின்றனர்.

அண்ணளவாக ஒரு மாதத்தில் 31.6% மான நேரத்தை இணைப் பாவனைக்காக செலவிடுகின்றனர். இதில் கிட்டத்தட்ட 132 மில்லியன் (3/4) அமெரிக்கர்கள் "இணைய வீடியோ கிளிப்ஸ்'களைப் பார்க்கின்றனர் எனவும் இவர்களுள் 64.9 மில்லியன் பேர் Google ஐயும் 35.0 மில்லியன் பேர் Yahoo ஐயும் பயன்படுத்துகின்றனர் எனவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஐரோப்பாவில் சுமார் 52 மில்லியன் இணையப் பாவனையாளர்கள் காணப்படுகின்றனர். 35.1 மில்லியன் இணையப் பாவனையாளர்களைக் கொண்ட லண்டனில் 25% மானோர் 15-25 வயதிற்குற்பட்டவராவர். ""ஐரோப்பாவில் 15-21 க்கும் இடைப்பட்ட வயதினரே அதிகமாக இணைத்தைப் பாவிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையே இணையம் என கருதும் அளவுக்கு அவர்களின் பாவனை இருக்கிறது'' என இணைய ஆய்வாளரொருவர் குறிப்பிடுகிறார்.


ComScore Network எனும் நிறுவனத்தின் அண்மைய ஆய்வின்படி, 2007 ஜனவரி மாதம் முழுவதுமாக கனடா 39.6% மான நேரத்தையும் இஸ்ரவேல் 37.4% மான நேரத்தையும் இணையப் பாவனைக்காக செலவழித்துள்ளது. லண்டன் 31.2% தை இணையப் பாவனைக்காக செலவழித்திருக்கிறது. உலகின் அதிக சனத்தொகையை கொண்டுள்ள ஆசியா கண்டமானது, அண்ணளவாக 43 கோடி இணையப் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. இதில் சீனா 133.5 மில்லியன் பேர் இணையத்தைப் பாவிக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் ஜப்பானும் 1/10 என்ற வீகிதாசாரத்தில் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.

அண்டைய நாடான இந்தியா அதனது 112 கோடி சனத்தொகையில் கிட்டத்தட்ட 40 கோடி இணையப் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன், பாகிஸ்தான், மலேசியா, இந்தோனே´யா போன்ற நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இணைய வசதிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றன.

ழுத்தறிவில் 93%ப் பெற்று தெற்காசியாவில் முன்னணி வகிக்கும் இலங்கை கணினியறிவில் 10%ஐ மட்டுமே பெற்றுள்ளது. இதில் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் இணைத்தைப் பயன்படுத்துகின்றனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் 1/56 சதவீதத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published in Metro Weekly on Feb, 2008

Sunday, December 16, 2007